Month: February 2012

  • வருடங்கள் உருண்டோடி
    தனிமையிலே முதியவர்கள் ஆனோம்.
    முகத்தில் சுருக்கங்களுடன்
    எத்தனையோ எத்தனை வருத்தங்கள்.
    அவர் வருவதற்காக காத்து இருந்தோம்.
    எங்கள் இளமையை மீட்பதற்காக
    அந்த வருகை.
    மீண்டும் நாங்கள் இளைஞர்களாக மாறுவோம்.
    அதுவரை சலனமற்ற நீர்பரப்பில் பிரதிபலிப்போம்
    எங்கள் வருத்தங்களை.