Month: December 2011

  • ராஜேஷ்வரியம்மாளை யாரோ கொன்றுவிட்டார்கள். இரவு நேரம் ஆளில்லாத சமயம் அவரைக் கழுத்து நெரித்துக் கொன்று, வீட்டிலிருந்து நகைகளையும் பணத்தையும் திருடிச் சென்றிருப்பார்கள் என்று போலீஸ் சந்தேகப்படுகிறது. குடித்தனங்கள் இருக்கிற வீட்டில் புதிதாய் ஓர் ஆள் உள்ளே நுழைந்திருக்க வாய்ப்பில்லை என்றும், இது யாரோ தெரிந்தவர்கள் செய்த வேலை என்கிற ஒரு கோணத்திலும் விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது.

    ராஜேஷ்வரியம்மாளுக்கு அறுபத்தி ஐந்து வயதிற்கு மேலிருக்கும். எப்போதும் டல்லான ஒற்றை கலர் பழைய சேலை தான் அணிந்திருப்பார். நெற்றியில் பட்டையாய் விபூதி இருக்கும். கணவர் இறந்ததில் இருந்து குங்குமம் கிடையாது. பல்செட் அணிந்திருப்பதால் வயது பெரிதாய் தெரியாது. தெருவில் அவரை எல்லாரும் முசுடு கிழவி என்று தான் அழைப்பார்கள். ஆனால் அதை அவருக்கு முன்னால் அந்த பேரைச் சொல்ல யாருக்கும் தைரியம் கிடையாது. எல்லாரிடமும் வள் வள் என விழுவது தான் அவரது ஸ்டைல்.

    சென்னையின் ஒரு பிரதான இடத்தில் நெருக்கடியான கட்டிடங்கள் மிகுந்த ஒரு வீதியில் அவருக்கு சொந்தமான ஒரு பெரிய கட்டிடம் இருந்தது.… …மேலும் வாசிக்க


  • பரிந்துரை: சிலருக்கு ஜோக்கர், பலருக்கு புரியாத புதிர், யாரும் அவரை எளிதில் புறந்தள்ளி விட முடியாது. சுப்ரமணிய சாமியை புரிந்து கொள்வது எப்படி? தெகல்கா இதழில் அவரைப் பற்றி ஓர் அலசல்.

     

     


  • அவ்வபோது பார்க்கும் காட்சி தான்.
    ஆனால் இன்று
    வேகமாய் நகரும் மேகங்களை பார்க்கும் போது
    வானமே இடிந்து கீழே விழுவது போல
    பிம்பம் உருவாகிறது.

    என் சிறு வயதில் பார்த்த
    ரயில் நிலையத்தருகே கூடி
    சிறிது நேரம் அரட்டையடித்து திரும்பும்
    முதியவர் கூட்டம் பற்றி அவ்வபோது நினைப்பதுண்டு.
    சில சமயம் அதை மேற்கோளாக காட்டி எல்லாம் பேசியதுண்டு.
    ஆனால் இப்போது அவர்களில் பெரும்பாலனோர்
    உயிருடன் இருக்க மாட்டார்கள் என்கிற நினைப்பு
    சமீபத்தில் தான் தோன்றியது.

    தினமும் போகும் பாதை தான்.
    ஒரு நாள் வேறு திசையில் இருந்து வரும்போது
    அது முற்றிலும் அன்னியமானதொரு சாலையாக மாறுகிறது.

    தினசரி புழங்கும் இடங்களில் கூட
    திடீரென ஒரு நாள் முளைக்கின்றன
    பெரிய கட்டிடங்கள்.

    என்னுள் எங்கோ
    திடீர் விழிப்பு
    திடீரென நிகழ்ந்து
    பிறகு கரைந்து போய் விடுகிறது.