Month: February 2010

  • அடிமைகளை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே தெரியும் அதன் சுகம்.
    வேலைகளை ஏவலாம்.
    கோபத்தைக் கொட்டலாம்.
    அடிக்க கூட செய்யலாம்.
    வல்லுறவு கொள்ளலாம்.
    நம் காலில் விழுந்து அவர்களை அழ வைக்கலாம்.

    “மன்னித்து விட்டேன் இந்த முறை பிழைத்து கொள்,” என்று மட்டும் சொல்லாதீர்கள்.
    அதற்குப் பதில் அவர்களை கொன்று விடலாம்.


  • மோகம் வென்று
    கழுத்தை அறுத்து இரத்தம் குடித்து
    உதிரப் படுக்கையில் தூங்கும் போது
    வருவதெல்லாம் துர்கனவுகள்.
    இரத்தம் பீறிடும் போது எப்படி வலிக்கும்?
    என்னுள் குத்திய ஊசிகளின் எண்ணிக்கை
    அதிகரித்து கொண்டே இருக்கின்றன.
    இத்தனை வலியையும் கொடையளிக்க
    தினம் தினம் திரிகிறேன்
    சிலுவையை சுமந்தபடி.