Month: January 2010

  • சற்று முன்பு எனது வார்த்தைகளை திருடிச் சென்றவன்

    இதோ இந்த நகரின் ஏதோ ஓர் இருள்சந்தினுள்

    அதனை திறந்து பார்ப்பான்.

     

    எதை எடுத்து கொள்வான், எதை எறிந்து செல்வான் என தெரியவில்லை.

    திருடியவன் தன் வழியில் எங்காவது எதாவது கொட்டி இருக்கிறானா என

    என் பாட்டி பாதை எங்கும் தேட போய் விட்டாள்.

    மௌனத்தை வாயில் மென்றவாறு சலித்து கொள்கிறேன் நான்.


  •  என்னுடைய பதிவு ஒன்று ஒரு வாக்கெடுப்பில் கலந்து கொண்டு அதில் உள்ள 16 பிரிவுகளில் உள்ள ஒரு பிரிவில் இரண்டாம் பரிசு பெற்றதாகவும் அதனால் அந்த தளம் எனக்கு ஒரு பதக்கம் கொடுத்ததாகவும் அந்த பதக்கத்தை நான் என் வலைப்பதிவின் முகப்பில் மாட்டி வைத்திருப்பேன் என சில மாதங்களுக்கு முன்னால் யாராவது சொல்லியிருந்தால் நான் சிரித்திருக்கக் கூடும். எனக்கு விருது கிடைக்க போவுதா? நல்ல கதை! என்கிற மாதிரியான தன்னடக்கம் அல்ல. நான் ஒரு பரிசு பதக்கத்தை ஷோ கேஷில் வைக்க மாட்டேன் என்கிற மாதிரியான திமிர் தான்.

    ஆனால் இன்று அது தான் நடந்தது. பதக்கத்தை கொடுத்தவுடன் முதல் ஆளாய் ஓடி போய் அதை வாங்கி வந்து முகப்பில் எல்லாரும் பார்க்கிற மாதிரி வைத்த பிறகு தான் இதிலே என்ன தவறு இருக்கிறது என எண்ணம் ஓடியது. பரிசு வாங்குவதற்கு துள்ளும் மனமும், வாங்கிய பரிசினை நண்பர்களுக்கு காட்டுகிற குதூகலமும் இன்றும் என்னிடம் இருப்பது, ‘நல்ல வேளை இன்னும் மனுசனா தான் இருக்கோம்,’ என்பதை உறுதி செய்தது.… …மேலும் வாசிக்க


  • ஆயிரம் முட்களாய் குளிர்.
    சுருண்டு கிடக்கும் கிழவியிடமிருந்து
    பிளாட்பார்ம் எங்கும் பரவுகிறது நடுக்கம்.
    அவளது தனிமையை அவ்வபோது தின்று போகின்றன
    சாலை பெருவாகனங்கள்.
    கருவிழிக்குள் எறும்புகள் பாதை அமைக்கும் வரை காத்திருக்கிறது இருள்.

    பிறகு ஒரு இரவு
    குளிரையும் இருளையும் மாண்டவளுக்காக அங்கே படையல் போட்டு
    உட்கார்ந்திருக்கிறாள் மற்றொரு பிளாட்பார்ம் கிழவி.