Month: December 2009

  •  சிறு வயதில் இருந்தே எனக்கு புது வருட பிறப்பு என்பது தீபாவளி, பொங்கல் போல ஒரு பண்டிகை தான். வளர்ந்ததும் புது வருட பிறப்பு என்பது எதையாவது வித்தியாசமாக செய்ய வேண்டிய தினமாக மாறியது. மொழி தெரியாத ஊரில் சுற்றியது, இலக்கில்லாத பயணத்தில் கழித்தது, நண்பர்களுடன் சண்டை போட்டது, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது என புது வருட முதல் தின நிகழ்வுகள் திட்டமிட்டோ அல்லது திட்டம் இல்லாமலோ எதோ ஒரு மறக்க முடியாத நிகழ்வுகளை கொண்டதாகவே அமைகின்றன.சென்னை திருவல்லிகேணி பார்த்தசாரதி கோயில் அருகே மென்சனில் தங்கியிருந்த நாட்களில் டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவு மெரீனா கடற்கரையில் கூடும் ஆயிரக்கணக்கான இளைஞர்களை கண்டு ஆச்சரியப்பட்டு இருக்கிறேன்.

    “ஹேப்பி நியூ இயர்,” என்பது ஓர் இனிய கீதம் போல இளைஞர்களின் மூச்சுக்காற்றின் வெப்பத்தோடும் மது வாடையோடும் கடற்கரையை நிரப்பியிருக்கும். கடற்கரையை ஒட்டிய சாலையில் நூற்றுக்கணக்கான டூவீலர்கள் குடிக்கார இளைஞர்களால் பரபரத்து கொண்டிருக்கும். நிறைய போலீசார் குவிந்திருப்பார்கள்.… …மேலும் வாசிக்க


  • பாம்புகள்!
    தடித்தவை! இளைத்தவை! பெருந்தலை!
    நீண்டவை! குறுகியவை!
    சில படமெடுக்கும்! சில சுருங்கி கிடக்கும்!
    ஒன்றன் மேல் ஒன்றாய் நெளிந்து கொண்டு இருக்கும்
    ஆயிரக்கணக்கான சர்ப்பங்கள்
    சிலந்தி வலைப்பின்னலாய்
    பச்சைவெளியை கறுப்பாக்கி கொண்டிருக்கின்றன.

    உச்சியில் ஆணவமாய் தாண்டவமாடும்
    ஐந்து தலையானின் சீறல்
    மிச்சமிருக்கும் தாவரங்களையும் வாடச் செய்கின்றன.

    வானத்தை சூழ்கின்றன செந்நிற மேகங்கள்.
    நிலமென்றும் மலையென்றும் பாராது
    நடுநடுங்க செய்கிறது
    மெல்லியதாய் படமெடுத்து பின் விஸ்வரூபமெடுக்கும்
    நிலநடுக்கம்.

    விட்டு விட்டு பெய்த மழையால்
    உருவாகிறது ஒரு பெருவெள்ளம்.

    ஐந்து தலையானில் தொடங்கி
    ஓரே சர்ப்பமாய் பின்னி நிற்கின்றன
    மற்ற ஆயிரக்கணக்கான பாம்புகள்.

    ஒரு மின்னல் வெட்டி முறிந்து போனது.