Month: June 2009

  • கிழவனது கண்ணிமை முடிகளை எறும்புகள் பாதி மென்று
    ஒன்று போல தைத்து விட்டாற் போல வலி.
    அந்த வலியோடு தான்
    தினமும் அந்த கிழவனின் தூக்கம் கலையும்.

    எப்போதும் போல விழிப்பு வானத்தை பார்த்தபடி தான்.
    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முகம் காட்டும் வானம்.
    ஆனால் பெரும்பாலும் ஒரே மாதிரியான தின வாழ்க்கை தான் கிழவனுடையது.

    முதல் காரியமாய் தொலைந்து போன அவனது நாணயத்தை தேட தொடங்குவான்.
    ‘நடைபாதை, புல்வெளி, புதர்
    இவற்றை தாண்டி அந்த நாணயம் வேறு எங்கும் போய் இருக்காது.’
    அங்குலம் அங்குலமாய் அந்த பகுதிகளை அலசி கொண்டிருப்பான்.
    கற்களை மெல்ல புரட்டி பார்ப்பான், குழந்தையை தொடுவது போல.
    தேடல் தீவிரமாய் நடந்து கொண்டிருக்கும் போதே வானம் இருட்ட தொடங்கி விடும்.
    நிலா ஒளியும், தெரு விளக்குகளும், இருட்டும் கிழவனை குளிப்பாட்டும்.
    ஆனாலும் தேடல் நடந்து கொண்டே இருக்கும்.

    முப்பது வருடங்களுக்கு மேலாகி விட்டது எனினும்
    கிழவன் எப்போதும் நாணயத்தை தேடி கொண்டே இருக்கிறான்
    ஒருவித லயிப்போடு.


  • நகரத்தின் இறுக்கம் சில சமயம் யதேச்சையாக பார்க்க கிடைக்கும் சில காட்சிகளில் வெளிபடுகிறது. ஓர் ஐம்பது வயது முதியவர் டிராபிக் சிக்னலில் தனது ஸ்கூட்டருடன் விழுந்து விட்டார். சமாளித்து எழுந்து அதை உதைத்து ஸ்டார்ட் செய்ய முயல்கிறார். ஸ்கூட்டர் மீண்டும் சரிகிறது. சிக்னலில் பச்சை விளக்கு எரிகிறது. முதல் ஆளாய் நிற்கும் இந்த முதியவரை நோக்கி ஒரே சமயத்தில் ஒலிக்கின்றன பல வகையான ஹாரன் ஒலிகள்.

    தனது பேரனை பள்ளிக்கு கூட்டி செல்லும் மூதாட்டி வழி தெரியாமல் சாலையில் பரிதவித்து நிற்பது போன்ற காட்சிகள் நமது கண்பார்வையின் எல்லையோரம் நடந்து மறைந்து விடுகிறது.

    இது வேறொரு மூதாட்டியின் கதை. ஹெலன் அந்த மூதாட்டியின் பெயர். காலை ஏழுரை மணிக்கு வடபழனி பஸ் நிறுத்தம் பக்கம் கூடும் ஒரு சிறு கூட்டத்தில் அவரைக் காண முடியும். வீடு வீடாக போய் சோப்பு பவுடர் போன்றவற்றை விற்க வேண்டும். இந்த கூட்டத்தில் ஹெலன் தான் மிகவும் வயதான பெண்.… …மேலும் வாசிக்க


  • மேகங்கள் திடீரென ஒரு நாள்
    வேகமாய் நகர தொடங்கி இருப்பதை கவனித்தேன்.

    ஆற்றுத்தண்ணீர் போல
    அந்த தண்ணீரில் கொப்பளிக்கும் நுரைகள் போல
    போர் விமானங்கள் போல
    சோகங்கள் போல
    ஓவியத்தின் மீது ஊற்றபட்ட தண்ணீர் போல
    மேகங்களின் அபரித வேகத்தை கண்டு
    எனக்கு பயமாக இருந்தது.

    தினமும் காலையில் கண் விழித்தவுடன்
    இன்றாவது மேகங்களின் போராட்டம்
    முடிவிற்கு வந்து விட்டதா என்கிற
    ஆர்வத்துடன் வீட்டிற்கு வெளியே வந்து
    பார்க்க தொடங்கினேன்.

    ஆனால்
    முடிவே இல்லாத நீண்ட கனவாக
    அது மாறி கொண்டிருந்தது.

    அப்போது தான் அது நடந்தது…


  • நமது உலக மக்கள் தொகை இந்த பதிப்பு எழுதபட்டு கொண்டிருக்கும் சமயம் 692 கோடியை நோக்கி வளர்ந்து கொண்டிருக்கிறது. இதே சமயம் ஜக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் உலகத்தில் இப்போது 100 கோடி பேர் பட்டினியால் வாடுவதாக சொல்லபட்டு இருக்கிறது. அதாவது ஏழு பேரில் ஒருவர் பட்டினியால் வாடுவதாக பொதுபடையாக கொள்ளலாம்.

    இந்தியாவின் நிலை இன்னும் மோசம்
    உலக ஜனதொகையில் ஆறில் ஒரு பங்கு இந்தியர்கள். ஆனால் பட்டினியால் வாடும் ஜனத்தில் 50% பேர் இந்தியர்கள். உணவு பற்றாகுறையும் மிக குறைந்த வருவாய் கொண்ட குடும்பங்களும் நிறைந்த நாடு தான் இந்தியா. நோய்கள் மிக எளிதாக நம் நாட்டை குறி வைப்பதில் வியப்பு ஒன்றும் இல்லை. இங்கு பத்தில் ஒன்பது கர்ப்பமுற்ற பெண்கள் இரத்த சோகையால் பாதிக்கபட்டு இருக்கிறார்கள். தாயின் இரத்த சோகை பிறக்கும் குழந்தையின் உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.

    இந்தியா

    • 15 கோடி குழந்தைகள் பட்டினியால் பாதிக்கபட்டிருக்கிறார்கள்.
    • இந்தியாவில் ஏற்படும் 50% குழந்தைகளின் மரணம் சத்துணவு பற்றாக்குறையால் ஏற்படுகிறது.
    …மேலும் வாசிக்க

  •  

    கொடூரமான போர் ஓய்ந்து விட்டாற் போல் தோன்றினாலும், இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு இன்னும் சித்ரவதை காலம் முடியவில்லை. விடுதலைப்புலி வீரர்கள் யாரும் தங்கள் பிடியில் இருந்து தப்பி விடக்கூடாது என்பதற்காக இலங்கை அரசு கிட்டதட்ட மூன்று லட்சம் தமிழ் மக்களை கம்பி வேலிகளுக்கு இடையே முகாம்களில் அடைத்து வைத்து இருக்கிறது.

    வவுனியா, மன்னார், திரிகோணாமலை, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் நாற்பது முகாம்கள் அமைக்கபட்டுள்ளன. இங்குள்ள மக்கள் இந்த முகாம்களில் இருந்து வெளியே செல்ல முடியாது. இவர்கள் ஏற்கெனவே போர் காரணமாக கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானவர்கள். தற்போது முகாம் பகுதிகளில் உள்ள சுகாதார சீர்கேட்டின் காரணமாக பல்வேறு தொற்று நோய்களும் இவர்களை தாக்க தொடங்கியிருக்கின்றன.

    அடிப்படை வசதிகள் அற்ற இந்த முகாம்கள் அரசின் மனித உரிமை மீறல் என சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் குரல் கொடுத்தபடி இருக்கின்றன. இந்த முகாம்களில் உள்ள நிலையை கண்டறிய யாருக்கும் அனுமதி இல்லை.

    …மேலும் வாசிக்க

  • 100 கிலோமீட்டர் வேகத்தில் மரணம்.
    கீழிருந்து உயர்ந்து செல்லும் மேம்பாலம் உச்சியில் முடிவடைய
    அதற்கு கீழே தனது அகலமான சேலையை விரித்து
    காத்திருக்கிறது கடல்.

    இது தற்கொலை மேம்பாலம்.
    யார் வேண்டுமானாலும் பைக்கை ஓட்டியபடி சென்று
    தற்கொலை செய்து கொள்ளலாம்.

    இந்த ஊருக்கு வரும் சுற்றுலா பயணிகள் பலர்
    காண விரும்பும் இடம் இது தான்.
    சுற்றுலா பயணிகளுக்காகவே மேம்பாலத்தின் வடக்கே
    ஒரு திறந்த மண்டபம் அமைந்திருக்கிறது.

    அந்த மண்டபத்தினுள் இருந்து பார்த்தால்
    மேம்பாலத்தில் எப்போதுமே
    ஒன்றிரண்டு பைக்குகள் ஏறி கொண்டிருப்பதையும்
    அவர்களை விழுங்க அலைகளை கரகோஷமிட்டபடி
    கடல் துள்ளுவதையும் காணலாம்.

    கோடைக்காலம் இங்கு உகந்த காலம்.
    அச்சமயம் பத்து பனிரெண்டு பைக்குகள் கூட
    ஒரே சமயத்தில் மேம்பாலத்தில் ஏறி கொண்டிருக்கும்.
    சமயங்களில் டிராபிக் ஜாம் ஆவதும் உண்டு.

    மேம்பாலத்தின் கீழே நின்றிருக்கும்
    காவலாளியை கண்டு கொள்ளாதீர்கள்.
    அவனது வேலை வேடிக்கை பார்ப்பது மட்டுமே.
    அதுவும் அவன் கடலுக்கு எதிர் திசையில் தான்
    எப்போதும் பார்த்தபடி இருப்பான்.