Month: May 2008

  • பேய், திகில், அமானுஷ்யம், திரில்லர் என்கிற மூடில் கதை வாசிக்க நினைப்பவர்கள் தயவு செய்து இந்த கதையை வாசிக்க வேண்டாம்.

    நண்பர் யெஸ்.பாலபாரதி தன்னுடைய விடுபட்டவை வலைத்தளத்தில் பேய் வீடு என ஒரு சிறுகதையை பதித்திருக்கிறார். அதனை படித்தவுடன் எனக்குள் ஏதோ ஓர் உத்வேகம். அதே கதையை நான் மளமளவென எனது நடையில் தட்டச்சு செய்ய ஆரம்பித்து விட்டேன். இன்னொருத்தர் கதையை இப்படி உரிமை கொண்டாடுவது தவறு தான். என்றாலும் கதை என் மீது செலுத்திய தாக்கமே இதற்கு காரணம்.

    இப்போது என் கதையை படிக்கும் போது பாலபாரதியின் கதைத்தலே சிறப்பாக இருக்கிறது என்றும், நான் தேவையில்லாமல் அதனை பாடுபடுத்திவிட்டேன் என்றும் தோன்றுகிறது. என்றாலும் எது சரி, எது தவறு, காரணம் என்ன போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இந்த கதையை பதிக்க அனுமதி அளித்த நண்பர் யெஸ்.பாலபாரதிக்கு நன்றி. இந்த கதையை படிப்பதற்கு முன் வாசகர்கள் அவரது பேய் வீடுகதையை படித்துவிடுதல் வாசிப்பனுபவத்திற்கு உகந்ததாக இருக்கும்.

    …மேலும் வாசிக்க

  • கரிய வெயிலாய் இருட்டு
    துளிதுளியாய் வியர்வையை உறிஞ்ச,
    குரல் நூறு குரலாய் எதிரொலிக்கும்
    முடிவில்லா குகையினுள் தனியே நின்று கொண்டிருப்பது
    பயமாக இருக்கிறது.

    கால்கள் சோம்பினாலும்
    பயம் முன்னால் இழுத்து செல்கிறது.
    இங்கு வெறுமையை தவிர வேறு எதுவும் இல்லையா?

    மனம் தன் அனல்வெறுமையில்
    ஆயிரம் ஆவிகள் என்னை சூழ்ந்து நிற்பதை பார்க்கிறது.
    பிரகாசிக்கும் வெண் பற்கள்.
    அதன் மேலே இரத்த கறை.
    இரத்த கறையினுள் பூத்திருக்கிருக்கின்றன புழுக்கள்.

    ஆயிரம் ஆவிகளும் முறைத்திருக்க,
    அந்த முறைப்பு முதுகெலும்பில் சில்லிட்டு இருக்க,
    செயலிழந்த கால்களை இழுத்தபடி
    தாகத்தில் நாவறண்டு ஓடுகிறேன்
    முடிவில்லா குகையினுள்.

    இரத்த கறையில் கரைந்து போன முன்னோர்களுக்கு தெரியாது
    குகைக்கு வெளியே உதிர பசியோடு காத்திருக்கிறது
    வெள்ளை இருட்டாய் வெளிச்சம்.


  • ஒரு காலத்தில் எல்லா பேப்பர்களிலும் ஆட்டோ சங்கர் பற்றிய தகவல்களாய் இருந்தது. பிறகு வீரப்பன். ஹர்ஷத் மேத்தா, சிவகாசி ஜெயலட்சமி, டாக்டர் பிரகாஷ் என ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு செய்தி பிரதானமாய் ஊடகங்களில் அடிபடும். பிறகு நிறைய செய்தி தொலைக்காட்சி சானல்கள், பரபரப்பு பத்திரிக்கைகள் தோன்றின. ஊடகங்கள் மத்தியில் வளரும் போட்டி மனப்பான்மை காரணத்தால் இன்று பெரிய செய்திகளுக்கு தட்டுபாடு நிலவுகிறது. ஒரு ‘சத்துள்ள’ செய்தி கிடைத்த வேகத்தில் முழுமையாக சக்கையாகபட்டு மிக விரைவில் காலவதி ஆகிவிடுகிறது.

    இன்று செய்தி அறையை போர்களம் போல வர்ணிக்கிறார்கள். மக்களுக்கு உண்மையில் தேவையான செய்தியை தான் இன்றைய பத்திரிக்கைகள் செய்தியாய் வடிவெடுக்கின்றனவா என்கிற கேள்விக்கு உள்ளே இந்த கட்டுரை போக போவதில்லை. நோம் சாம்ஸ்கி சிந்தனைகள் இன்று ஊடகத்துறை மாணவர்களுக்கும் தெரியும். பிரபல ஊடகம் என்பது ஒரு வணிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் இந்த கட்டுரையின் நோக்கம், ‘ஒரு செய்தியை பிரபலமாக்கும் அதிகாரம் யாரிடம் இருக்கிறது?’… …மேலும் வாசிக்க


  • மொட்டை மாடியில் தொடர்ந்து உலாவுபவர்களை
    சாதாரணமாய் வெளியிடங்களில் இனம் காண முடியாது.
    நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்களும்
    இருபது வயதிற்கு உட்பட்டவர்களுமே அதிகம்.

    கிராமத்தில் தனது வீடு மட்டுமே காங்கிரீட் வீடு என்கிற
    அகங்காரத்தின் காரணத்தினால்
    தன் மொட்டை மாடியில் உலா வந்த சிறுவன் பாண்டி.
    இளைஞன் ஆன பின் கல்லூரி ஹாஸ்டலிலே
    மொட்டை மாடியில் தான் அரட்டை கச்சேரி
    விடிய விடிய அரங்கேறும்.
    திருமணத்திற்கு பிறகு
    அறியா நகரத்தின் பற்கள் கொடுத்த காயத்தை போக்க
    மனதை லேசாக்க மொட்டை மாடியில் அமர்ந்து
    கண்ணுக்கெட்டிய தூரம் மனிதர்களும் கட்டிடங்களுமாய் தெரியும்
    நகரத்தை பார்வையால் வெறித்திருப்பான்.

    மனைவியின் மரணத்திற்கு பின்பு
    மகனுக்கும் மருமகளுக்கும் கூடுதல் சுமையாய்
    தன்னை கருதி வாழும் பாண்டிக்கு
    இருப்பதெல்லாம் ஒரு பிரச்சனை.
    அவர்கள் அபார்ட்மெண்ட் கட்டிடத்தின் மொட்டை மாடியில் யாருக்கும் அனுமதியில்லை.
    இறந்து போனான் விரைவில்.

    சொர்ணம்மாளுக்கு மொட்டை மாடியில் தான்
    தன் முதிய வயது ஒத்த தோழிகள் உண்டு.
    மருமகளை பற்றி பேச பேச குறையாமல் இருக்கும் புகார்கள்.…மேலும் வாசிக்க


  • உத்தபுரம் கிராமத்தில் நடந்த அவலங்களை கேள்விபட்டீர்களா? கேள்விபட்டவர்கள் அடுத்த பத்தியை தவிர்த்து அதற்கு அடுத்த பத்தியிலிருந்து படிக்கவும். கேள்விபடாதவர்கள் தொடர்ந்து வாசியுங்கள்.

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கிராமம் உத்தபுரம். இங்கு ஏறத்தாழ இரண்டாயிரம் தலித் குடும்பங்கள் வசிக்கிறார்கள். என்றாலும் இங்கு இருக்கும் சாதி இந்துக்கள் தலித்களை பல காலமாக புறக்கணித்து வந்திருக்கிறார்கள். 1990ம் ஆண்டு இந்த கிராமத்தில் சாதி ரீதியிலான மோதல் நடந்ததாக சொல்லபடுகிறது. இந்த மோதல் சம்பவத்தினை தொடர்ந்து சாதி இந்துக்கள் வசிக்கும் பகுதிக்கும் தலித் மக்கள் வாழும் பகுதிக்கும் இடையே 600 மீட்டர் நீள காங்ரீட் சுவர் கட்டபட்டிருக்கிறது. கிராமத்தில் உள்ள பொது வசதிகளை தலித் மக்கள் உபயோகிக்க கூடாது என்பதற்காகவே இந்த சுவர் கட்டபட்டிருக்கிறது. ஏறத்தாழ இருபது வருடங்கள் இந்த சுவர் இந்த மண்ணின் சாதி வெறியையும் அதிகாரிகளின் அலட்சியத்தையும் பறைசாற்றியபடி இருந்திருக்கிறது.…மேலும் வாசிக்க


  • இருளை தவிர வேறு பொருளில்லை.
    என் குரலை தவிர வேறு ஓலியில்லை.

    தோல் எல்லாம் சொரசொரப்பாய் உதிர்கிறது.
    தரையெங்கும் என் தலைமுடிகள் பரவி கிடக்கின்றன
    .
    காலும் கையும் ஒரே பணியை தான் செய்கின்றன
    .
    இந்த நான்கு சுவர்களை தாண்டி உலகம் அழிந்து போயிருக்கக்கூடும்
    .

    பஞ்சு மேகங்களாய் கடந்த கால நினைவுகள்
    தெளிவில்லாமல் அவ்வபோது கனவில் தோன்றும்
    .
    என் பழைய மொழியில் உறுமல் மட்டுமே நினைவில் இருக்கிறது.

    சமீபத்தில் தான் கற்று கொண்டேன்,
    இந்த அறையில் என்னோடு வசிக்கும்
    சிறுசிறு உயிரினங்களின் மொழியை
    .

    சிந்திக்க மறந்தேன்.
    அதனால் வாழ்கிறேன்
    .