
மரத்தில் கட்டப்பட்ட திருடன்
பெரிய தூங்குமூஞ்சி மரம்.
கவனித்து பார்த்தால் தான் தெரியும்
மரத்தில் திருடன் ஒருவன்
கட்டப்பட்டு இருப்பது.
மரத்தின் நிறமாய்
மாறி விட்டன
கயிறும்
திருடனும். ...தொடர்ந்து வாசியுங்கள்

சிலுவை
பாரம் தரும் வலி.
கூட்டத்தின் ஆர்ப்பரிப்பு தரும் சோகம்.
பல நூறு பார்வைகள் தாக்குவதால் வரும் தடுமாற்றம். ...தொடர்ந்து வாசியுங்கள்

பள்ளிக்கூட மணி
இலைகளின் சலசலப்பு போல
சில பேச்சரவம்.
மற்றப்படி
நிரம்பி நின்றிருக்கும் நீர்நிலைப் போல
பேரமைதி. ...தொடர்ந்து வாசியுங்கள்

பெல்ட்
பெல்ட் உயரும் போது
அது
நரியின் வால்.
தயாராகும் போது
அது
பயந்து உறைந்து
அடுத்த நகர்தலில் தீண்டுவதற்குத் தயாராகும்
பாம்பு. ...தொடர்ந்து வாசியுங்கள்

அழுகையின் இசை
சற்று முன்பு பெய்த மழையின்
பளபளப்பில்
ஓர் இரயில் நிலையம்.
ஈரத் தரை விரிந்து கிடந்த
பிளாட்பார்மில்
சோகமுடன் அமர்ந்திருக்கிறாள்
அந்தப் பெண். ...தொடர்ந்து வாசியுங்கள்

கவிஞன் ஒருவன்
உலகில் இது வரை
இப்படியொரு கவிஞன்
இருந்ததுமில்லை;
இருக்கப்போவதுமில்லை
என மொழி வாழும் காலம் வரை
தன் பெயர் நிலைக்க வேண்டுமென
விரும்பினான். ...தொடர்ந்து வாசியுங்கள்

இந்தக் கணம்
இந்தக் கணம் இன்பமாய் இருக்கிறது.
வழியும் சிகரெட் புகை
உடலில் எங்கோ கீதமிசைக்கிறது.
இசையின் மயக்கத்தில் நடனமாடுகின்றன
நரம்புகள்.
சூடாய் இறங்கும் தேனீர் பானம்
உடலிற்குள்
இளம் மழையின் அரவணைப்பு. ...தொடர்ந்து வாசியுங்கள்
அவளும் அவளைப் பின்தொடரும் மிருகமும்
தன் அறையிலிருந்து வெளியே வந்தவுடன்
அவளை அந்த மிருகம் பின்தொடரும்.
அரூபமானது! வக்கிரமானது! நிழல் போல!
சூடான மூச்சுக்காற்றினைப் பின்கழுத்தில் உணர்வாள். ...தொடர்ந்து வாசியுங்கள்

லிங்கம்
ஒரு மீட்டலில் இசைத்து விடுகிற வீணை தான்
எனினும் ஏழு மலைத் தாண்டி ஏழு கடல் தாண்டி
அலைந்து திரிந்தாலும் அதன் பசி அடங்குவதில்லை. ...தொடர்ந்து வாசியுங்கள்

ஊர் காவல்தெய்வம்
இந்த ஊரின் காவல் தெய்வமே!
இன்னல் நேர்ந்தால் நோய் தீர்ப்பவளே!
அந்தக் தவறைச் செய்தது நானே!
அகத்திலே குற்ற உணர்வு மிகுந்திருந்தேன்! ...தொடர்ந்து வாசியுங்கள்