sairams
Menu
  • கவிதைகள்
    • கவிதைகள்
    • தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கவிதைகள்
  • கதைகள்
    • கதைகள்
    • மனிதர்கள்
    • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
    • கட்டுரைகள்
    • வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல
    • உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை
  • வலைப்பதிவு பற்றி…
    • அறிமுகம்
    • உள்ளடக்கம்
    • பின்தொடர்
    • தொடர்பு
    • அதிகம் பார்வையிடப்பட்ட 10
    • நண்பர்கள்
Home » தலித்
சாதியை ஒழிப்பது எப்படி? - அம்பேத்கர்

சாதியை ஒழிப்பது எப்படி? – அம்பேத்கர்

Saturday, April 14th, 2012 11:45 am · by சாய் ராம் · in கட்டுரைகள்

ஆனால் உங்கள் சாதியை விட்டு இன்னொரு சாதியினரோடு திருமணம் செய்து கொள்ளுங்கள் என எவ்வளவு தான் பிரச்சாரம் செய்தாலும் அதை மக்கள் ஏற்று கொள்ள மறுக்கிறார்களே, ஏன்? சாதி செங்கற்களால் கட்டப்பட்ட சுவர் அல்ல. ஒரு தடுப்பினை எடுத்து விட்டால் சாதியினை ஒழித்து விடலாம் என நினைக்க கூடாது. சாதி என்பது ஓர் உணர்வு. அது ஒரு மனநிலை. இந்துக்கள் சாதியினை ஏன் பின்பற்றுகிறார்கள்? அது தவறானது, மனித உரிமை மீறல் என்பதால் அதை அவர்கள் பின்பற்றவில்லை. அவர்கள் தங்கள் மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுடையவர்களாக இருக்கிறார்கள். அதனாலே அவர்கள் சாதிமுறையை கடைபிடிப்பவர்களாக இருக்கிறார்கள். தொடர்ந்து வாசியுங்கள்...

பள்ளிக்கூடங்களில் சாதி மோதல்

பள்ளிக்கூடங்களில் சாதி மோதல்

Wednesday, March 28th, 2012 10:09 pm · by சாய் ராம் · in கட்டுரைகள்

இந்த மாதம் மட்டும் தலித் மாணவர்கள் சக பள்ளிக்கூடத்து மாணவர்களாலே தாக்கப்படும் சம்பவங்கள் மூன்று நடந்துள்ளன. மதுரை அருகே உசிலம்பட்டி அருகே பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் சாதி மோதலில் ஈடுபட்டு இருக்கிறார்கள். வெளியாட்களும் இந்த மோதலில் வந்து பங்கேற்றார்களாம். கடைசியில் போலீஸ் வந்த போது, போலீஸாரைப் பார்த்து கல் எறிந்து இருக்கிறார்கள். இந்தச் சம்பவம் தொடர்பாக பிறகு ஆறு மாணவர்கள் கைது செய்யப்பட்டார்கள். தொடர்ந்து வாசியுங்கள்...

பரமக்குடி, பள்ளிக்கூடம், வாகனத்தை கண்டாலே பயந்து ஓடும் கிராம மக்கள்

Thursday, October 13th, 2011 12:26 pm · by சாய் ராம் · in கட்டுரைகள்

பல கிராமங்களில் பள்ளிக்கூடங்களில் தலித் மாணவர்கள் ஒதுக்கபடுவது, வித்தியாசமாக நடத்தபடுவது அல்லது துரத்தபடுவது இன்றும் நடக்கிறது. கிராமங்கள் மட்டுமல்ல நகரங்களிலும் சாதியை பற்றிய அறிவுறுத்தல் பிள்ளைபருவத்திலே தொடங்கி விடுகிறது. ‘அவர்கள்’ vs ‘இவர்கள்’ மனநிலை மேலோங்குகிறது. அதுவும் ஏற்கெனவே சாதி பிரச்சனைகள் அதிகமாக இருக்குமிடத்தில் பத்து வயது சிறுவன் கூட தன் சாதி பற்றிய பிடிப்போடு அல்லது தாழ்வு மனப்பான்மையோடு இருப்பதை காண முடியும். மாணவர்கள் அனைவரும் சாதி பற்றியும் அதன் படிநிலை பற்றியும் தங்கள் சாதி எந்த படிநிலையில் இருக்கிறது என்பதையும் அறிந்தே இருக்கிறார்கள். தொடர்ந்து வாசியுங்கள்...

சுடுவதற்கு முன் ஒரு கணம் சாதி!

Thursday, September 15th, 2011 10:00 am · by சாய் ராம் · in கட்டுரைகள்

என்னுள் எங்கோ ஆழத்தில் சாதி மனநிலை இருப்பது கண்டு துணுக்குற்றேன். என்னுள் வர்க்க பேதம், ஆணாதிக்கம், அறிவு கற்பித திமிர் என பல விஷயங்களுடன் கலந்து கிடந்தது சாதி மனநிலை. என்றாலும் தனித்து இருந்தது. எங்கோ ஆழத்தில் அது என்னை இயக்கும் சக்தி படைத்ததாகவும் இருந்தது. என் சக மனிதர்களும் அவ்வாறே இருப்பதாய் நான் ஒவ்வொரு முறையும் கண்டறிகிறேன். தொடர்ந்து வாசியுங்கள்...

சட்டங்கள் அமைதியை குலைக்கும் என்றால் இந்த சட்டங்கள் எதற்கு?

Tuesday, October 19th, 2010 12:01 am · by சாய் ராம் · in கட்டுரைகள்

கிருஷ்ணகிரி அருகே அகரம் என்கிற கிராமத்தில் சாதி இந்துகள் தாங்கள் வசிக்கும் பகுதிக்குள் தலித் மக்கள் வரக்கூடாது என வேலி அமைத்த செய்தி சமீபத்தில் வெளியானது. கிராமத்து ஊர் கவுண்டரின் உத்தரவின்பேரில் இந்த முள்வேலி கம்பி கட்டபட்டதாக சொல்லபடுகிறது. தொடர்ந்து வாசியுங்கள்...

பிச்சை போடாதே

Friday, March 12th, 2010 11:23 pm · by சாய் ராம் · in கட்டுரைகள்

இந்த வாரம் உயிர்மை குழுமத்தின் இணைய இதழான உயிரோசையில் என்னுடைய ‘பிச்சையும் வேண்டாம்! தானமும் வேண்டாம்!’ என்கிற கட்டுரை வெளிவந்து இருக்கிறது. ஊடகங்களில் பணிபுரிய தொடங்கி ஏறத்தாழ பத்து வருடங்களுக்கு மேலாகியும், எனது கட்டுரை வேறொரு ஊடகத்தில் பதிக்கபட்டிருப்பதை பார்க்கும் போது இன்றைக்கும் என் மனம் சந்தோஷத்தில் பொங்குவதை என்ன என்று சொல்ல! கட்டுரையை மீண்டும் படித்த போது அதன் நீட்சியாக சில எண்ணங்கள் தோன்றின. அதை பதிவு செய்ய தான்

தொடர்ந்து வாசியுங்கள்...

தலித்தை கொளுத்தினார்கள்

Sunday, September 20th, 2009 8:02 pm · by சாய் ராம் · in கட்டுரைகள்

என்னை கேட்டால் சாதி தான் இந்தியாவின் மைய பிரச்சனை என்பேன். ஆயிரமாயிரம் காலமாய் சாதியால் எழுப்பப்பட்டு வந்த இந்த சமூகம் இன்று சாதிய பாகுபாடுகளால் அவலத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இதற்கு சாட்சியாக இன்றும் இந்தியா எங்கும் சாதி பாகுபாடு காரணத்தால் எக்கச்சக்க வன்முறைகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. இதில் பெரும்பாலனவற்றில் குற்றவாளிகள் தண்டிக்கபடுவதில்லை என்பது ஒரு பக்கம். பல சமயங்களில் பாதிக்கபட்டவர்களே காவல்துறையால் அச்சுறுத்தலுக்கு ஆளாகிறார்கள் அல்லது கைது செய்யபடுகிறார்கள். தொடர்ந்து வாசியுங்கள்...

உத்தபுரமும் காம்ரேடுகளும்

Sunday, September 13th, 2009 12:26 am · by சாய் ராம் · in கட்டுரைகள்

இன்று கம்யூனிஸ்ட் தலைவர் [சிபிஎம்] பிருந்தா காரத் உத்தபுரம் கிராமத்திற்கு சென்றார். அதற்கு முன்பு காலையில் காவல்துறையினர் அவரையும் அவருடன் இருந்த காம்ரேடுகளையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து இருக்கிறார்கள்.

உத்தபுரம் கிராமத்தில் நிலவும் பிரச்சனை பற்றி அறியாதவர்கள் இங்கே படிக்கவும்.

சமீப காலமாக காம்ரேடுகள் தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுக்க தலித் பிரச்சனைகளில் அதிக அக்கறை காட்டி வருகிறார்கள்… தொடர்ந்து வாசியுங்கள்...

இடுகாட்டிலும் சாதியா?

Sunday, March 29th, 2009 7:51 pm · by சாய் ராம் · in கட்டுரைகள்

“…நமது அரசியலைப்பு உருவாகி அறுபது வருடங்களாகி விட்டன. தீண்டாமை இன்னும் அழிந்தபாடில்லை…” – நீதிபதி பி.கே.மிஸ்ரா & நீதிபதி ஜெயசந்திரன், உயர்நீதிமன்றம்.

மேற்சொன்ன வார்த்தைகள் சமீபத்தில் நடந்த வழக்கு ஒன்றில் நீதிபதிகளால் சொல்லபட்டவை. என்ன வழக்கு அது?

திருச்சி அருகே மணப்பாறை தாலுக்காவில் உள்ள சம்பட்டி பஞ்சாய்த்து இடுகாட்டில் தலித் உடலை புதைக்க அனுமதி மறுத்தனர் சாதி இந்துக்கள். இது நடந்தது டிசம்பர் 2008இல். மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் என எல்லா உயர் அதிகாரிகளும் அங்கு வந்து சமரசம் பேசினர். சாதி இந்துக்கள் தலித் உடலை… தொடர்ந்து வாசியுங்கள்...

ஆயிரக்கணக்கான உத்தபுரங்கள்

Thursday, May 8th, 2008 1:18 am · by சாய் ராம் · in கட்டுரைகள்

ஏறத்தாழ இரண்டாயிரம் தலித் குடும்பங்கள் வசிக்கிறார்கள். என்றாலும் இங்கு இருக்கும் சாதி இந்துக்கள் தலித்களை பல காலமாக புறக்கணித்து வந்திருக்கிறார்கள். 1990ம் ஆண்டு இந்த கிராமத்தில் சாதி ரீதியிலான மோதல் நடந்ததாக சொல்லபடுகிறது. இந்த மோதல் சம்பவத்தினை தொடர்ந்து சாதி இந்துக்கள் வசிக்கும் பகுதிக்கும் தலித் மக்கள் வாழும் பகுதிக்கும் இடையே 600 மீட்டர் நீள காங்ரீட் சுவர் கட்டபட்டிருக்கிறது. கிராமத்தில் உள்ள பொது வசதிகளை தலித் மக்கள் உபயோகிக்க கூடாது என்பதற்காகவே இந்த சுவர் கட்டபட்டிருக்கிறது. ஏறத்தாழ இருபது வருடங்கள் இந்த சுவர் இந்த மண்ணின் சாதி வெறியையும் அதிகாரிகளின் அலட்சியத்தையும் பறைசாற்றியபடி இருந்திருக்கிறது. தொடர்ந்து வாசியுங்கள்...

வலைப்பதிவில் தேடு

பதிவுகளை மின்னஞ்சலில் பெறுங்கள்

Enter your email address:

Delivered by FeedBurner

மனிதர்கள் – புனைவும் நிஜமும்

நான் கடவுள் ஆம்பிள்ளைகளை நம்பவே கூடாது
அவனுக்குள் கேட்கும் குரல் திருமணம் வேண்டாம்

உலகப்புகழ் புகைப்படங்களின் கதை

தியனன்மென்-சதுக்கம் அந்தக் கண்கள்
வெற்றி களிப்பில் ஒரு முத்தம் நிர்வாணப் பெண்

அறிமுகம்

சாய் ராம் என் பெயர். பல காலமாய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணிபுரிந்து வருகிறேன். என்னுடைய படைப்புகளைப் பதிக்கவும், நடப்பு செய்திகளைப் பற்றி விவாதிக்கவும், சுவாரஸ்யங்களைப் பகிர்ந்து கொள்ளவும் இந்த வலைப்பதிவு. மேலும் வாசிக்க...

பெரும்பிரிவுகளும் உட்பிரிவுகளும்

  • கவிதைகள் (110)
    • தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கவிதைகள் (5)
    • இளமதியின் கவிதைகள் (1)
  • கதைகள் (24)
    • மனிதர்கள் (21)
    • சிறுகதைகள் (3)
  • கட்டுரைகள் (77)
    • வாக்களிப்பது மட்டும் ஜனநாயகம் அல்ல (8)
    • உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை (4)

பின்தொடர்

வலைப்பதிவினைப் பின்தொடருங்கள்

உங்களுக்குச் சொந்த வலைப்பதிவு வேண்டுமா?

  • 750 ரூபாயில் இரண்டு ஜீபி வலையகம்
  • 600 ரூபாயில் .com வலை பெயர் பதிவு
  • எண்ணற்ற மின்னஞ்சல் முகவரிகள்
  • பிரபல Hostgator-யின் தொழில்நுட்ப உதவி
MILK HOST மூலம் வலைப்பின்னுங்கள்

Copyright © 2013 S.Sai Ram. All Rights Reserved.

Powered by WordPress and Origin. Milkhosted by Ravi.