ஓர் அரக்கன்

ஓர் அரக்கன் இங்கு வசிக்கிறான்.
அவ்வபோது அவன் தலைக்காட்டும் போதெல்லாம்
அராஜகம் தலைவிரித்தாடுகிறது.

பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீரோடு நொந்து இருக்கிறார்கள்.
சிலர் ஆயதங்களோடு அவன் திரும்பி வர காத்திருக்கிறார்கள்.
சிலர் இடத்தைக் காலி செய்து விட்டார்கள்.

அவன் வந்து சென்ற தடங்களில்
நடந்தபடி இருக்கிறேன்.
அவன் விட்டு சென்ற அழிவுகளில்
சிதறி கிடக்கும் பொருட்களில்
மீட்பிற்கான அறிகுறிகள் எதுவுமில்லை.

நாட்கள் செல்ல செல்ல
அவனது தொல்லைக் குறையுமென நினைத்திருந்தேன்.
மாறாக அது அதிகரித்தபடி இருக்கிறது.

அவன் வந்து சென்ற பிறகு
ஒவ்வொரு முறையும்
என்னுள் பிறீடுகிறது
அளவற்ற குற்றவுணர்ச்சியின் வலி.

ஓர் அரக்கன் என்னுள் வசிக்கிறான்.
அவ்வபோது அவன் தலைக்காட்டும் போதெல்லாம்
அராஜகம் தலைவிரித்தாடுகிறது.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.