Year: 2012
-
வலியே வலியை மறக்க வைக்குமளவு
வலியே வலியை மறக்க வைக்குமளவு அடிக்கப்பட்டு உள்ளெல்லாம் சிதைந்து நாளெல்லாம் மரணத்தை வேண்டி நிற்கும்
-
பிரபஞ்சம் நானே
காற்றில் சலசலக்கும் மரம் சலசலப்பை உண்டாக்குகிறது என்னுள். இலைகளின் மீட்டலை உணர்கிறேன் நரம்புகளில்.
-
கண்ணாடி ரசமெல்லாம் வழிந்தோடி விட்டது
நீங்கள் மேற்கொண்ட எதோ ஒரு தொலைதூர பிரயாணத்தில் சந்தேக வியாதி உங்களைத் தொற்றி கொண்டது. உடலை உருக்கி விட்டதென சொல்கிறார்கள் எல்லாரும். உங்கள் நடை தள்ளாடுகிறது. மயங்கி விழுகிறீர்கள் ஒருநாள்.
-
உன் கண்களில் தெரியும் என் பிம்பம்
கண்களின் ஓர் அலட்சிய சுழிப்போ துள்ளலோ அமைதியோ பதட்டமோ எனக்கான இடம் என்ன என்பதைச் சொல்கிறது.
-
பழுதாகிப் போன தண்ணீர் குழாய்
நம் வீடோ அன்னிய இடமோ பழுதாகிப் போன தண்ணீர் குழாய் எப்போதும் பதட்டத்தை ஏற்படுத்துகிறது.
-
ஒவ்வொரு கொலைக்கும் காரணம் வேண்டும்
உனது கழுத்தினை அழுத்தி நீ மூச்சு திணறி இறந்து போவதைப் பார்க்க போகிறேன். உன்னோடு எப்போதும் இருக்கும் அந்தச் சுகந்தம் நீ இறந்த பிறகு எவ்வளவு நிமிடங்கள் நீடிக்கும்?
-
ஹம் சத்தம்
சாலை விளக்குகளும் எதிர் வரும் வாகனங்களின் விளக்குகளும் கலந்து இணைந்த பிறகும் தொடர்கிறது பயணம். நிற்காமல் ஓடும் தார் சாலையும் ஹம் சத்தமும் வாகனத்தை இயக்குகின்றன.
-
மனிதர்கள் – பைக்கில் பிரசவ வலியோடு
தெய்வாணை அந்தப் பெண்ணின் பெயர். பிரசவ வலியோடு மலைக்கிராமத்தில் இருந்து தொட்டில் கட்டி கீழே கொண்டு வரப்பட்டு இரண்டு ஆண்களுக்கு இடையில் பைக்கில் அமர்ந்து பயணித்து மருத்துவமனைக்குச் சென்றடைந்த தெய்வாணையின் கதை கேட்பவர்களைப் பதற வைக்கும்.
-
சாதியை ஒழிப்பது எப்படி? – அம்பேத்கர்
ஆனால் உங்கள் சாதியை விட்டு இன்னொரு சாதியினரோடு திருமணம் செய்து கொள்ளுங்கள் என எவ்வளவு தான் பிரச்சாரம் செய்தாலும் அதை மக்கள் ஏற்று கொள்ள மறுக்கிறார்களே, ஏன்? சாதி செங்கற்களால் கட்டப்பட்ட சுவர் அல்ல. ஒரு தடுப்பினை எடுத்து விட்டால் சாதியினை ஒழித்து விடலாம் என நினைக்க கூடாது. சாதி என்பது ஓர் உணர்வு. அது ஒரு மனநிலை. இந்துக்கள் சாதியினை ஏன் பின்பற்றுகிறார்கள்? அது தவறானது, மனித உரிமை மீறல் என்பதால் அதை அவர்கள் பின்பற்றவில்லை.…