ஏன் ஒளித்து வைக்கிறீர்கள்?

எதிர்படும் ஒவ்வொருவரின் கண்களிலும்
ஒளிந்திருக்கிறது
கார்முகிலென சோகம்.

புன்னகையால் அவர்கள் தங்களது துயரத்தை
மறைக்க முயல்கிறார்கள்.
எனினும் அது எப்போதும் சாத்தியபடுவதில்லை.

வெளிவரும் அரிய கணங்களில்
ஒருவரது சோகம்
மற்றவரையும் தொற்றி கொள்கிறது.
அதனோடு குண்டூசிகளாய் குத்துகின்றன
ஏன் ஒளித்து வைக்கிறீர்கள் என்கிற
துன்பம்.


Comments
2 responses to “ஏன் ஒளித்து வைக்கிறீர்கள்?”
  1. D.R.Ashok Avatar

    present sir

  2. நன்றி அசோக். மீண்டும் மீண்டும் வருவதற்கு. உங்களுக்காகவே அடுத்தடுத்து பதிவுகள் போடுகிறேன். 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.