Year: 2009

  •  சிறு வயதில் இருந்தே எனக்கு புது வருட பிறப்பு என்பது தீபாவளி, பொங்கல் போல ஒரு பண்டிகை தான். வளர்ந்ததும் புது வருட பிறப்பு என்பது எதையாவது வித்தியாசமாக செய்ய வேண்டிய தினமாக மாறியது. மொழி தெரியாத ஊரில் சுற்றியது, இலக்கில்லாத பயணத்தில் கழித்தது, நண்பர்களுடன் சண்டை போட்டது, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது என புது வருட முதல் தின நிகழ்வுகள் திட்டமிட்டோ அல்லது திட்டம் இல்லாமலோ எதோ ஒரு மறக்க முடியாத நிகழ்வுகளை கொண்டதாகவே அமைகின்றன.சென்னை திருவல்லிகேணி பார்த்தசாரதி கோயில் அருகே மென்சனில் தங்கியிருந்த நாட்களில் டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவு மெரீனா கடற்கரையில் கூடும் ஆயிரக்கணக்கான இளைஞர்களை கண்டு ஆச்சரியப்பட்டு இருக்கிறேன்.

    “ஹேப்பி நியூ இயர்,” என்பது ஓர் இனிய கீதம் போல இளைஞர்களின் மூச்சுக்காற்றின் வெப்பத்தோடும் மது வாடையோடும் கடற்கரையை நிரப்பியிருக்கும். கடற்கரையை ஒட்டிய சாலையில் நூற்றுக்கணக்கான டூவீலர்கள் குடிக்கார இளைஞர்களால் பரபரத்து கொண்டிருக்கும். நிறைய போலீசார் குவிந்திருப்பார்கள்.… …மேலும் வாசிக்க


  • பாம்புகள்!
    தடித்தவை! இளைத்தவை! பெருந்தலை!
    நீண்டவை! குறுகியவை!
    சில படமெடுக்கும்! சில சுருங்கி கிடக்கும்!
    ஒன்றன் மேல் ஒன்றாய் நெளிந்து கொண்டு இருக்கும்
    ஆயிரக்கணக்கான சர்ப்பங்கள்
    சிலந்தி வலைப்பின்னலாய்
    பச்சைவெளியை கறுப்பாக்கி கொண்டிருக்கின்றன.

    உச்சியில் ஆணவமாய் தாண்டவமாடும்
    ஐந்து தலையானின் சீறல்
    மிச்சமிருக்கும் தாவரங்களையும் வாடச் செய்கின்றன.

    வானத்தை சூழ்கின்றன செந்நிற மேகங்கள்.
    நிலமென்றும் மலையென்றும் பாராது
    நடுநடுங்க செய்கிறது
    மெல்லியதாய் படமெடுத்து பின் விஸ்வரூபமெடுக்கும்
    நிலநடுக்கம்.

    விட்டு விட்டு பெய்த மழையால்
    உருவாகிறது ஒரு பெருவெள்ளம்.

    ஐந்து தலையானில் தொடங்கி
    ஓரே சர்ப்பமாய் பின்னி நிற்கின்றன
    மற்ற ஆயிரக்கணக்கான பாம்புகள்.

    ஒரு மின்னல் வெட்டி முறிந்து போனது.


  • எவ்வளவோ முறை தவிர்க்க முயன்றாலும்
    இன்று மீண்டும்
    அந்த விழிகளை பார்த்து விட்டேன்.

    சுயத்தை மறந்து
    தரையோடு தரையாய்
    கரைந்தாற் போல பரிதவிப்பு.

    தனது அடுத்த நொடி
    இன்னொருவன் கைகளால் எழுதபட போகிறதென பயம்.

    சுருண்டு பொசுங்கி புள்ளியாய்,
    கடைசி எழுத்திற்குள்
    ஒளிந்திருக்கும் இயலாமை.

    கண்களால் மன்றாடுவதை தவிர
    உடலிலும் உயிரிலும்
    வேறு செயலில்லை.

    கூர்மையானதொரு ஆயுதம்
    என்னுள் ஆழமாய் எங்கோ எதையோ அறுக்கிறது.


  • ஸ்ரீ லங்கா கார்டியன் பத்திரிக்கையில் வெளிவந்த அருந்ததி ராயின் பேட்டியில் இருந்து சில பகுதிகள்.

    …நிலைமை முற்றிலும் மோசமாக இருக்கிறது. நான் (இலங்கை) முகாம்களை நேரிடையாக பார்வையிடவில்லை. ஆனால் அங்கே மிக பெரிய மனித உரிமை மீறல் பிரச்சனை நடந்து கொண்டிருப்பது வெளிப்படை. அதை உலகம் அலட்சியபடுத்துகிறது.  லட்சக்கணக்கான மக்களை முகாம்களில் அடைத்து வைத்து அவர்கள் மீது வெற்றி கொக்கரிப்பு செய்வது என்பது அதிர்ச்சியான விஷயம். மனதை உறைய செய்யும் கொடுமை. அரசாங்கம் அங்கு நடப்பதை வெளியுலகம் அறிய முடியாதபடி செய்து இருக்கிறது. ஆனாலும் அதை தாண்டி வெளி வந்த சில தகவல்களை பாருங்கள்.  (நாஜிகளின்) முகாம் என அதற்கு பெயரிடுவது தான் பொருத்தமாக இருக்கும்.  இவை எல்லாம் பொய் என்றால் இலங்கை அரசு எதற்கு மீடியாவை முகாம்களுக்கு போக அனுமதி மறுக்கிறது…

    …இந்திய மக்கள் பல்வேறுபட்ட பின்புலங்களை உடையவர்கள். இங்குள்ள ஊடகங்கள் இலங்கையில் என்ன நடந்தது என்பதை கவனமாய் தவிர்த்து விட்டன.… …மேலும் வாசிக்க


  • நாங்கள் சில நூறு பேர் இருந்தோம்.
    ஏழெட்டு மின்னல் கீற்றுகள்
    ஒரே சமயத்தில் வானத்தில் தோன்றுவதை பார்த்தோம்.
    அடர் கருப்பினூடாக அந்த மின்னல் கிழிசல்கள்
    அவரது வருகைக்கு முன்னுரை எழுதின.

    குழந்தை அழும் சத்தம்.
    அதை அதட்டும் ஒலி.
    அழுகை கட்டுபடாமல் பெரும் சத்தமாகி
    தொற்று போல பலருக்கும் பரவுகிறது.
    ஒரு பெண் தேம்பி தேம்பி அழுகிறாள்.
    முதியவர் சரிந்து தரையில் விழுகிறார்.
    ஒரு கூட்டுப் பாடல் போல அழுகை ஒலி
    பெரும் வடிவெடித்து வெடிக்கிறது.

    ஒரு பாம்பு நெளிவது போல
    எங்களுக்கு அடியில் பூமி நெளிகிறது.
    ஒரு பெண் பயந்து அலறுகிறாள்.
    காற்று எங்களது முகத்தில் மழைத்தூறலை வீசி அடிக்கிறது.
    கண்ணிமைக்கும் நேரத்தில் அது நிகழ்ந்தது.


  • கடும் தண்ணீர் தட்டுபாடு, அச்சுறுத்தும் மழைக்காலம், டெண்ட் கூரைகளை பெயர்த்தெடுக்கும் பலத்த காற்று, கழிவறைகள் வழிந்து வாழும் டெண்ட்களுக்கு இடையில் ஓடும் சுகாதாரமற்ற நிலை, இட நெருக்கடி, ராணுவத்தினர் செய்யும் சித்ரவதைகள், அவ்வபோது ராணுவத்தினரால் காணாமல் போகும் முகாம்வாசிகள், முடக்கபட்ட சுதந்திரம் என்று தற்போது இலங்கையில் உள்ள தமிழர் முகாம்கள் பெரும் அவல நிலைக்கு ஆளாகி இருக்கிறது. இதற்கு ஆதாரமாய் அங்கு நடக்கும் விஷயங்கள் பற்றிய நேரடி சாட்சியங்களை Human Rights Watch என்கிற சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனம் தனது அறிக்கையில் சமீபத்தில் வெளியிட்டது. அதன் சுருக்கம் கீழே கொடுக்கபட்டு இருக்கிறது.

    இலங்கையில் இன்று இரண்டறை லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் முகாம்களில் சிறை வைக்கபட்டு இருக்கிறார்கள். ஐ.நாவின் கூற்றுபடி சரியாக 2,55,551 பேர். வவூனியா மாவட்டத்தில் உள்ள மானிக் முகாமில் தான் அதிகமானோர் தங்க வைக்கபட்டிருப்பதாக தெரிகிறது.

    மானிக் முகாமிற்கு அருகே உள்ள ஒரு நதியில் இருந்து பைப்லைன் மூலமாக தான் தண்ணீர் முகாமிற்கு அளிக்கபட்டு வந்தது.… …மேலும் வாசிக்க


  • பக்கத்தில் படுத்திருக்கும் பெண்
    யாரென தெரியவில்லை.
    இருளை அகற்ற சுவிட்ச்
    எங்கிருக்கிறது என புரியவில்லை.
    இது என் வீடுமில்லை.
    இங்கு இதற்கு முன் வந்ததாய்
    ஞாபகமும் இல்லை. 

    என் துணிகளை தேடி
    தரையில் கைகளால் துளாவிய போது
    மீண்டும் வந்தது
    மண்டைக்குள் அந்த நெளியும் புழு.

    கண்கள் இருட்டின.
    காதிலிருந்து இரத்தம் வழிந்தது.
    அந்த புழு பெருத்து கொண்டு இருக்கிறது.
    உடலெங்கும் வலி வியாபித்தது.
    விஷ முற்கள் கடகடவென
    உடலெங்கும் முளைக்க தொடங்குகின்றன.

    முதுகு தண்டினில்
    மற்றொரு புழு இப்போது நகர தொடங்குகிறது.
    தரையில் படுத்து துடிக்கிறேன்.
    எழுந்து நின்றால் சற்று வலி குறையும் என
    எழுந்து நிற்கிறேன்.

    எதையும் அறியாமல் நிர்வாணமாய்
    தூங்கி கொண்டிருக்கும் அந்த பெண் யார் என
    இப்போதும் புலப்படவில்லை.

    காற்று தான் வலியை கொண்டு வருகிறதா?
    ஜன்னலில் எட்டி பார்த்தேன்.
    நான் நிற்பது கட்டாயம்
    பத்து அல்லது பதினைந்தாவது மாடியாவது இருக்கும்.
    இது கட்டாயம் என்னுடைய நகரமல்ல.…மேலும் வாசிக்க


  • இந்தியாவின் மிக முக்கியமான பிரச்சனை எது?

    • பாகிஸ்தானுடன் நீடிக்கும் மோதல் மனபோக்கு
    • நாட்டினுள் ஊடூருவி தொல்லை கொடுக்கும் தீவிரவாதிகள்
    • உள்நாட்டு கலவரம் செய்யும் மாவோயிஸ்ட்டுகள்
    • கட்டுபடுத்த இயலா விலையேற்றம்
    • அரசு நிர்வாகத்தை அரித்து தின்று கொண்டிருக்கும் லஞ்சம்
    • சாதி பாகுபாடும் தலித் மற்றும் மலைவாசி மக்கள் மீதான வன்முறைகளும்

    என்னை கேட்டால் சாதி தான் இந்தியாவின் மைய பிரச்சனை என்பேன். ஆயிரமாயிரம் காலமாய் சாதியால் எழுப்பப்பட்டு வந்த இந்த சமூகம் இன்று சாதிய பாகுபாடுகளால் அவலத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இதற்கு சாட்சியாக இன்றும் இந்தியா எங்கும் சாதி பாகுபாடு காரணத்தால் எக்கச்சக்க வன்முறைகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. இதில் பெரும்பாலனவற்றில் குற்றவாளிகள் தண்டிக்கபடுவதில்லை என்பது ஒரு பக்கம். பல சமயங்களில் பாதிக்கபட்டவர்களே காவல்துறையால் அச்சுறுத்தலுக்கு ஆளாகிறார்கள் அல்லது கைது செய்யபடுகிறார்கள்.

    மத்திய பிரதேச சம்பவம்

    மத்திய பிரதேசத்தில் அமைந்திருக்கிறது சிவ்புரி மாவட்டம். தலித்களுக்கு எதிரான வன்முறைகள் இங்கு அதிகம் நடப்பதுண்டு. சவ்புரியில் வசிக்கும் நாராயண் சிங் என்னும் 56 வயது தலித் ஒருவர் இந்த வாரம் உயிரோடு எரிக்கபட்டார்.… …மேலும் வாசிக்க


  • கருணாநிதி மீண்டும் கோரிக்கை
    நேற்று அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில் தமிழக முதல்வர் கருணாநிதி மீண்டும் மாநில சுயாட்சி பற்றி பேச்சை எடுத்து இருக்கிறார். தி.மு.கவின் தொடக்க காலத்தில் மாநில சுயாட்சி முக்கிய கொள்கையாக இருந்தது. ஆனால் அதன் பிறகு அதை அப்படியே மறந்து விட்டார்கள். எப்போதாவது இது போல கருணாநிதி மட்டும் இதை எங்காவது சொல்லி டெல்லிக்காரர்கள் வயிற்றில் புளியை கரைப்பார். ஆனால் இது வெறும் பூச்சாண்டி விஷயம் என இப்போது எல்லாருக்கும் தெளிவாகி இருக்கும்.

    மாட்டி கொண்ட பிரணாப்
    பாவம், பிரணாப் முகர்ஜியும் மேடையில் மாட்டி கொண்டார். 1970-ம் ஆண்டு தமிழகம் வந்த பிரணாப் எப்படி எல்லாம் அன்று மாநில சுயாட்சிக்காக வாதிட்டார் என்பதை கருணாநிதி நேற்று மேடையில் பேசிய போது பிரணாப் அதை கேட்டு அமைதியாய் இருந்தார் என்கிறார்கள் நேரில் பார்த்தவர்கள்.

    “அன்று நாம் சேர்ந்து போராடினோம். இன்று நீங்கள் கொடுக்கிற இடத்தில் இருக்கிறீர்கள்,” என்று கருணாநிதி பேசியது பிரணாப்பிற்கு ஏண்டா இங்க வந்தோம் என்கிற எண்ணத்தை உண்டு செய்திருந்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை.… …மேலும் வாசிக்க


  • எதிர்படும் ஒவ்வொருவரின் கண்களிலும்
    ஒளிந்திருக்கிறது
    கார்முகிலென சோகம்.

    புன்னகையால் அவர்கள் தங்களது துயரத்தை
    மறைக்க முயல்கிறார்கள்.
    எனினும் அது எப்போதும் சாத்தியபடுவதில்லை.

    வெளிவரும் அரிய கணங்களில்
    ஒருவரது சோகம்
    மற்றவரையும் தொற்றி கொள்கிறது.
    அதனோடு குண்டூசிகளாய் குத்துகின்றன
    ஏன் ஒளித்து வைக்கிறீர்கள் என்கிற
    துன்பம்.