கரிய வெயிலாய் இருட்டு

கரிய வெயிலாய் இருட்டு
துளிதுளியாய் வியர்வையை உறிஞ்ச,
குரல் நூறு குரலாய் எதிரொலிக்கும்
முடிவில்லா குகையினுள் தனியே நின்று கொண்டிருப்பது
பயமாக இருக்கிறது.

கால்கள் சோம்பினாலும்
பயம் முன்னால் இழுத்து செல்கிறது.
இங்கு வெறுமையை தவிர வேறு எதுவும் இல்லையா?

மனம் தன் அனல்வெறுமையில்
ஆயிரம் ஆவிகள் என்னை சூழ்ந்து நிற்பதை பார்க்கிறது.
பிரகாசிக்கும் வெண் பற்கள்.
அதன் மேலே இரத்த கறை.
இரத்த கறையினுள் பூத்திருக்கிருக்கின்றன புழுக்கள்.

ஆயிரம் ஆவிகளும் முறைத்திருக்க,
அந்த முறைப்பு முதுகெலும்பில் சில்லிட்டு இருக்க,
செயலிழந்த கால்களை இழுத்தபடி
தாகத்தில் நாவறண்டு ஓடுகிறேன்
முடிவில்லா குகையினுள்.

இரத்த கறையில் கரைந்து போன முன்னோர்களுக்கு தெரியாது
குகைக்கு வெளியே உதிர பசியோடு காத்திருக்கிறது
வெள்ளை இருட்டாய் வெளிச்சம்.


2 thoughts on “கரிய வெயிலாய் இருட்டு

  1. ஏன் சாய்.. உங்கள் கவிதைகள் எல்லாம் ஒருவித வெறுமையின் விரக்தியும், தனிமையின் பயமுமாகவே இருக்கின்றன? இப்படியே போனால்.. பெருங்கூட்டத்தில் தனியெருவனாக இருக்க வேண்டியதிருக்கும்!

  2. பாலா, பெருங்கூட்டத்தில் தனியொருவனாய் இருப்பதாலே இப்படி கவிதைகள் வெளிவருகின்றனவோ என்னவோ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>